வங்க தேசத்தின் முன்னாள் ஜவுளித்துறை அமைச்சர் குலாம் தஸ்தகீர் காசி சனிக்கிழமை இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவாமி லீக் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர். இதன் விளைவாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரது தலைமையிலான அவாமி லீக் கட்சியினர் பலர் மீது தாக்குதல் மற்றும் கைது சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஷேக் ஹசீனா உட்பட பலர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவாமி லீக் கட்சியினர் பலர் தலைமுறைவாகிவிட்ட சூழலில், குலாம் தஸ்தகீர் காசி கைது செய்யப்பட்டுள்ளார்.