பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 35 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் முசாகெல் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் பேருந்தில் பயணித்த புலம்பெயர் தொழிலாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். ரரஷம் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அதிரடி தேடுதலில் ஈடுபட்டபோது, பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 21 பயங்கரவாதிகள் மற்றும் 14 பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 35 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தொடருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.