ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் 100 குடியேற்றப் பகுதிகளை கைப்பற்றி, 600 ரஷிய வீரர்களைக் கைது செய்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2022 முதல் நீடித்து வரும் போரில், சமீபத்தில் உக்ரைன் ரஷியாவுக்குள் பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல், உக்ரைன் படைகள் கூர்க்ஸ் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்தி, மக்கள் வெளியேறவிட்டனர். இதனைத் தொடர்ந்து, 30,000 ரஷிய ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு, உக்ரைன் படைகளைச் சுற்றிவளைக்க முயல்கின்றனர். மேலும், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பிற பகுதிகளில் ரஷியா ஏவுகணைகள் மற்றும் டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தியது.
இந்நிலையில் உக்ரைன் தரைப்படை தளபதி சிர்ஸ்கி கூறுகையில், கூர்க்ஸ் பிராந்தியத்தில் மேற்கொண்ட கடைசி தாக்குதல்களில், 600 ரஷிய படை வீரர்களைக் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு 100 குடியிருப்பு பகுதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.