சேலத்தில் பட்டாசு ஆலை வெடிப்பு காரணமாக ஒருவர் உயிரிழப்பு மற்றும் 4 பேர் காயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே கோமாளி வட்டத்தில், ஜெயக்குமார் என்பவருடைய பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட திடீர் வெடிப்பு தீவிபத்தில் மாறியது. பட்டாசு தயாரிக்கும் போது, பட்டாசு மருந்து மூட்டையை இறக்கும்போது, அதில் ஏற்பட்ட உரசலால் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது. இதில், சிவகாசி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் உட்பட 4 பேர் காயமடைந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜெயராமன் உயிரிழந்தார். தற்போது, போலீசாரும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.