டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் 48 மணி நேரத்தில் பதவி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, 48 மணி நேரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு, மாநில துணை நிலை ஆளுநருடன் சந்தித்து, ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று காலை, ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்குப் பிறகு, புதிய முதல்வர் யார் என அறிவிக்கப்படும். இந்த நிலையில், முதல்வர் பதவிக்கு புதிய நபர் ஒருவரை தேர்வு செய்ய விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














