ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "இஸ்ரேல் மண்ணில் குட்டரெஸ் காலடி எடுத்து வைக்க தகுதியற்றவர். ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதற்கு உலக நாடுகள் கண்டிப்பு தெரிவித்துள்ளன. இதில் மவுனம் காக்கும் யாருக்கும் இஸ்ரேல் மண்ணில் கால் வைக்க அனுமதி கிடையாது." மேலும், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானின் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நபர், இஸ்ரேலின் வரலாற்றில் ஒரு கறையாக நினைவில் வைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஈரான் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாகுவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு இஸ்ரேல் பதிலடி அளிக்கத் தயார் என்றும், ஈரானில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களை இலக்காகக் கொண்ட தாக்குதல் நிகழலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.