அரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
அரியானா மாநிலத்தில் 90 சட்டமன்ற இடங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், தற்போதைய முதல்வர் நயாப் சிங் சைனி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அதன்படி கவர்னர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, சந்திர பாபு நாய்டு மற்றும் பல பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.