பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.
லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில், ஹிஸ்புல்லாவின் முக்கிய அதிகாரிகள் எல்ஹாக் அப்பாஸ் சலாமேஹ், ராச்சா அப்பாஸ் இச்சா, மற்றும் அஹமது அலி ஹசின் ஆகிய மூவரும் பலியாகியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் பெய்ரூட் சுரங்கத்தில் செயல்படும் ஆயுத தளமும் சேதமடைந்தது என கூறப்பட்டுள்ளது.