பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 4 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம், டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள டாராபன் பகுதியில் ஒரு சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் 4 பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.