காசாமுனையின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த பள்ளியில் போரால் வீடுகளை இழந்த மக்கள் தங்கியிருந்தனர். பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் கூறும் தகவலின் அடிப்படையில், இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், நுசய்ரத் பகுதியில் உள்ள ஒரு தற்காலிக பாதுகாப்பு முகமையும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளானது. இந்த தாக்குதலில் 32 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல்களை குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் இஸ்ரேல் தரப்பில் இதுவரை வழங்கப்படவில்லை.














