அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை கண்டறிந்து, அவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.
2024-ம் நிதியாண்டில், சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை கண்டறிந்து, 495 விமானங்கள் மூலம் 145 நாடுகளுக்கு அனுப்பியதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது சர்வதேச ஒத்துழைப்புடன் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கொலம்பியா, ஈகுவேடார், பெரு, எகிப்து, மொரிடேனியா, செனெகல், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் குடியிருப்பினர்கள் அதிகமாக சட்டவிரோதமாக தங்கியிருந்தனர். அமெரிக்காவின் தென்மேற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் உள்ளது.