தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை

November 19, 2024

தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா பகுதிகளில், குறிப்பாக தென்மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதிக கனமழைக்கு வழிவகுத்து, பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தூத்துக்குடி மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரணயத்தில் 7.5 […]

தென்மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி, நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டின் கடலோர மற்றும் டெல்டா பகுதிகளில், குறிப்பாக தென்மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் குமரிக்கடல் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதிக கனமழைக்கு வழிவகுத்து, பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தூத்துக்குடி மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் வேதாரணயத்தில் 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதுடன், கோடியக்கரை, வேளாங்கண்ணி மற்றும் திருப்பூண்டி ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தொடர்ந்தும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
1 2 3 676

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu