ஐதராபாத்தில் மீன் வடிவில் கட்டப்பட்ட தேசிய மீன்வள அலுவலகம் அந்நகரத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய அலுவலகம், மிகவும் தனித்துவமான வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் வடிவம், ஒரு பெரிய மீனின் உருவத்தை பிரதிபலிக்கின்றது. இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தின் மீது நீல நிற விளக்குகள் பொழியும், அது ஒரு ராட்சத மீன் நீந்துகிற காட்சியைக் கொடுக்கின்றது. இந்த கட்டிடத்தை "தி பிஷ் பில்டிங்" என்று அழைக்கின்றனர். அதன் மிகப்பெரிய மீன் வடிவமைப்பின் காரணமாக, அது ஐதராபாத் நகரின் சிறப்பு அடையாளமாக மாறியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் உள்ள வித்தியாசமான கட்டிடங்களின் பட்டியலில் இந்த கட்டிடமும் இடம் பெற்றுள்ளது. இதன் ஆச்சரியமான வடிவமைப்பு பெரும் பாராட்டுகளையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது.