நவம்பர் 25 மறைகிறது பூமியின் இரண்டாம் நிலவு

November 21, 2024

தென்னாப்பிரிக்காவில் உள்ள நாசாவின் ATLAS அமைப்பு கடந்த ஆகஸ்ட் 7 அன்று கண்டுபிடித்த 2024 PT5 என்ற சிறுகோள், பூமியின் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாக கைப்பற்றப்பட்டு, நமது கிரகத்தை சுற்றி வந்தது. பேருந்து அளவுள்ள இந்த சிறுகோள், செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை பூமியின் "இரண்டாம் நிலவு" போல செயல்பட்டது. பூமியிலிருந்து சுமார் 37,60,000 கிலோமீட்டர் தொலைவில் பயணித்த இந்த சிறுகோள், அர்ஜுனா சிறுகோள் பட்டையைச் சேர்ந்ததாகவோ அல்லது சந்திரனின் ஒரு துண்டாகவோ இருக்கலாம் […]

தென்னாப்பிரிக்காவில் உள்ள நாசாவின் ATLAS அமைப்பு கடந்த ஆகஸ்ட் 7 அன்று கண்டுபிடித்த 2024 PT5 என்ற சிறுகோள், பூமியின் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாக கைப்பற்றப்பட்டு, நமது கிரகத்தை சுற்றி வந்தது. பேருந்து அளவுள்ள இந்த சிறுகோள், செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை பூமியின் "இரண்டாம் நிலவு" போல செயல்பட்டது. பூமியிலிருந்து சுமார் 37,60,000 கிலோமீட்டர் தொலைவில் பயணித்த இந்த சிறுகோள், அர்ஜுனா சிறுகோள் பட்டையைச் சேர்ந்ததாகவோ அல்லது சந்திரனின் ஒரு துண்டாகவோ இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், 2024 PT5 மிகவும் சிறியதாக இருந்ததால், தொழில்முறை தொலைநோக்கிகள் இல்லாமல் அதை வெறும் கண்களால் பார்க்க முடியவில்லை. பூமிக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாத இந்த சிறுகோள், மீண்டும் நம்மை வந்து சேர 2055 ஆம் ஆண்டு வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu