சென்னையில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி

November 25, 2024

திருமழிசை அருகே புதிய பஸ் நிலையம் கட்டப் படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வெளியூர் செல்லும் பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து வரும் பஸ்களை திருமழிசை அருகிலுள்ள குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு புதிய பஸ்நிலையம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. 24.8 ஏக்கர் நிலத்தில், […]

திருமழிசை அருகே புதிய பஸ் நிலையம் கட்டப் படுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வெளியூர் செல்லும் பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்குச் செல்லும் பஸ்கள் மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.மேலும், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து வரும் பஸ்களை திருமழிசை அருகிலுள்ள குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு புதிய பஸ்நிலையம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. 24.8 ஏக்கர் நிலத்தில், 427 கோடி ரூபாயில் இந்த புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 70 புறநகர் பஸ்கள், 30 ஆம்னி பஸ்கள் மற்றும் 36 மாநகர பஸ்கள் இயங்கும். இதோடு, 48 புறநகர் பஸ்கள், 27 ஆம்னி பஸ்கள் என 163 பஸ்களுக்கு நிறுத்தும் வசதி உள்ளது. பஸ்நிலையத்தின் கீழ் 1,800 இருசக்கர வாகனங்கள் மற்றும் 235 நான்குசக்கர வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் நாளும் சுமார் 500 தொழிலாளர்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2024 மார்ச் மாதம் இந்த பஸ்நிலையம் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu