ஜப்பானில் ரிக்டர் அளவில் 6.4 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி, மக்கள் அச்சத்தில் வீதிகளுக்கு வெளியே தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் ஜப்பானின் மேற்கு கடலோரபகுதிகளில் பதிவானது. இதன் பின்னர், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் இந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. அதில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.