இந்தியாவில் 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை ‘இனப்படுகொலை’ என அங்கீகரிக்கும் தீர்மானம் கனடாவின் நாடாளுமன்றக் குழுவில் தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர் ஜக்மீத் சிங் இன்று இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த நிகழ்வை உலகம் முழுவதும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன. இருப்பினும், இந்த தீர்மானம் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானத்தை தடுக்க முயன்ற ஆளும் லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கட்சியை ஜக்மீத் சிங் கடுமையாக விமர்சித்தார். மேலும், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான வாய்ப்பை தவறவிட்டது போல இது அமைந்ததாக கூறினார். இதேபோன்ற தீர்மானம் 2010-ம் ஆண்டிலும் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.