தன்சானியா : பயணிகள் விமானம் ஏரியில் விழுந்து விபத்து - 19 பேர் பலி

November 7, 2022

தான்சானியாவில், உள்நாட்டு விமான போக்குவரத்தில் ‘பிரேசிஷன் ஏர்’ (Precision Air) என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் விமானம் தன்சானியாவில் உள்ள ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில் நேற்று விழுந்து விபத்துக்குள்ளானது. புகோபா விமான நிலையத்திற்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது. எனவே, தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, இந்த விமானம் ஏரியில் விழுந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரியில் விழுந்த பின்னர். விமானம் முழுவதுமாக நீரில் மூழ்கியது. […]

தான்சானியாவில், உள்நாட்டு விமான போக்குவரத்தில் ‘பிரேசிஷன் ஏர்’ (Precision Air) என்ற தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் விமானம் தன்சானியாவில் உள்ள ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரியில் நேற்று விழுந்து விபத்துக்குள்ளானது. புகோபா விமான நிலையத்திற்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது. எனவே, தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, இந்த விமானம் ஏரியில் விழுந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் விழுந்த பின்னர். விமானம் முழுவதுமாக நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கி, விமானத்திலிருந்த 19 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. விமானத்தில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அண்மைக்காலத்தில், தான்சானியாவில் நடந்த மோசமான விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தான்சானியா அதிபர் சாமியா சுளுகு ஹசன் மற்றும் பிரதமர் காசிம் மஜாலிவா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu