டெல்லியில் விவசாயிகள் மீண்டும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
2020-ல் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தின. 2021-ல் மத்திய அரசு அந்த சட்டங்களை திரும்பப் பெற்றபோதும், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாயிகளுக்கான பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். தற்போது, உத்தரப் பிரதேசம் மற்றும் அரியானா எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியுள்ளனர். அதில் 16 விவசாயிகள் காயமடைந்துள்ளனர். இதனால் டெல்லி எல்லைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.