உலகளவில் மைக்ரோசாப்ட் சேவை முடங்கியது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த ஜூலை 19-ந்தேதி சர்வதேச அளவில் முடங்கியது. இதில், மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கோளாறு ஏற்பட்டது. இன்று திடீரென, மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகளவில் சேவைகள் முடங்கியதாக அறிவித்துள்ளது. சேவை பாதிக்கப்பட்டாலும், பயனாளர்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளன. இந்த கோளாறினால் அவுட்லுக், எக்செல், ஒன் டிரைவ் போன்ற முக்கிய செயலிகள் செயலிழந்துள்ளன. மைக்ரோசாப்ட் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.