ஜெய்ப்பூரில் எரிவாயு டேங்கர் தீ விபத்தில் 5 பேர் பலி

December 20, 2024

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து காரணமாக 5 பேர் உயிரிழந்தனர், 37 பேர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில், பெட்ரோல் பங்கின் அருகிலுள்ள பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தைத் தொடர்ந்து, 10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பரவிய […]

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து காரணமாக 5 பேர் உயிரிழந்தனர், 37 பேர் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில், பெட்ரோல் பங்கின் அருகிலுள்ள பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் 37 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தைத் தொடர்ந்து, 10 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்கில் பரவிய தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது, அப்போது பெட்ரோல் பங்கில் ரசாயனம் ஏற்றி சென்ற லாரி மற்றொரு வாகனத்தை மோதியதில் தீப்பிடித்தது. அப்பகுதியில் உள்ள வாகனங்களுக்கும் தீ பரவியது. தீ விபத்து தொடர்பாக, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். காயமுற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களை உத்தரவிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu