BSE சென்செக்ஸ் பட்டியலில், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்திற்கு பதிலாக ஜோமாடோ இணைக்கப்பட்டது. இந்த இணைப்புக்கு பின், இன்று, பங்குகள் 2.09% சரிந்துள்ளது. பல்வேறு தரகு நிறுவனங்கள், ஜொமாட்டோ நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்து, பங்குகள் உயரும் என்று கணிப்புகள் வெளியிட்ட நிலையில், பங்கு விலை சரிவடைந்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அதே சமயத்தில், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை 1.58% உயர்ந்துள்ளது. ஆனால், சென்செக்ஸில் இருந்து நீக்கப்பட்டதால், இந்த நிறுவனம் 2,142 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளது. தற்போது ஜொமாட்டோ நிறுவனத்தின் மதிப்பு 2.72 லட்சம் கோடியாகவும், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் மதிப்பு 2.24 லட்சம் கோடியாகவும் உள்ளது.