காசாவில் பத்திரிகையாளர்கள் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதன் காரணமாக, 10 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர்.
காசா போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உட்பட 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா நகரின் சைடவுன் பகுதியில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், காசாவின் அல் அவ்தா மருத்துவமனை அருகே, 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். நுசிராத் அகதிகள் முகாமில் பத்திரிகையாளர்கள் படம்பிடித்து கொண்டிருந்தபோது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக, காசாவில் 10 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்ததாக அறியப்படுகிறது.