ஜெர்மனியில் நாடாளுமன்றத்தை கலைத்து, ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர் இன்று புதிய தேர்தலை பிப்ரவரி 23-ல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலில், கடந்த 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் அரசு மெஜாரிட்டி இழந்தது. இந்த சூழலில், பல கட்சிகளின் தலைவர்கள் முன்கூட்டியே தேர்தல் நடத்த ஒப்புதல் அளித்தனர். ஜெர்மனியின் அரசியலமைப்பின்படி, நாடாளுமன்றம் தன்னைத் தானே கலைக்க முடியாததால், ஜனாதிபதிதான் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த முடிவெடுக்கிறார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.