ஆப்கானிஸ்தானில் பெண்களின் சுதந்திரத்தை மீண்டும் ஒருமுறை கடுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில், தாலிபான் அரசு புதிய தடையை விதித்துள்ளது. பெண்களை வேலைக்கு அமர்த்தும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் மூடுவதாக தலிபான் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சரியான முறையில் ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்களை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளி செல்லவோ, பெரும்பாலான வேலைகளில் ஈடுபடவோ, பொது இடங்களுக்குச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய தடையால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தலிபான் கட்டுப்பாட்டில் இல்லாத நிறுவனங்களில் கூட பெண்கள் பங்கேற்பதை தடுப்பது கவலையளிப்பதாக உள்ளது.