கெஸ்லர் சிண்ட்ரோம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

December 30, 2024

பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்வெளி பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இவை பூமியின் சுற்றுப்பாதையில் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் செயலிழந்து விடும் அபாயம் உள்ளது. 978 ஆம் ஆண்டு நாசா விஞ்ஞானி டொனால்ட் ஜே. கெஸ்லர் முன்மொழிந்த கெஸ்லர் சிண்ட்ரோம் என்னும் கோட்பாட்டின்படி, பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி குப்பைகள் அதிகரித்தால், அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டு மேலும் […]

பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்வெளி பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இவை பூமியின் சுற்றுப்பாதையில் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் செயலிழந்து விடும் அபாயம் உள்ளது.

978 ஆம் ஆண்டு நாசா விஞ்ஞானி டொனால்ட் ஜே. கெஸ்லர் முன்மொழிந்த கெஸ்லர் சிண்ட்ரோம் என்னும் கோட்பாட்டின்படி, பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள விண்வெளி குப்பைகள் அதிகரித்தால், அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டு மேலும் அதிகமான குப்பைகளை உருவாக்கும். இது ஒரு சங்கிலி எதிர்வினையை ஏற்படுத்தி, பூமியின் சுற்றுப்பாதையை பயன்படுத்த முடியாததாக ஆக்கிவிடும். 2023 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, விண்வெளி குப்பைகள் அதிகரிப்பதால், செயற்கைக்கோள்கள் மற்றும் எதிர்கால விண்வெளி ஆய்வுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கிறது. தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 6,000 டன் விண்வெளி குப்பைகள் உள்ளன. இதற்கு தீர்வு காண உலகளாவிய அளவில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விஞ்ஞானிகள், இந்நிலை தொடர்ந்தால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu