கேரளாவின் புதிய கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றார்.
கேரள மாநில கவர்னராக இருந்த ஆரீப்முகமதுகான், பீகார் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக, கேரள கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். இன்று அவர் 23-வது கேரள கவர்னராக பதவியேற்றார். கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிதின் ஜம்தார், அர்லேகருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.