இஸ்ரோ விண்வெளியில் விதை முளைத்ததால் புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இதனை இஸ்ரோ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி சி60 திட்டத்தில் விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ புதிய திறனை சாதித்துள்ளது. CROPS திட்டம் தற்போது வெற்றிகரமாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களில் கௌபீயா விதைகள் முளைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விரைவில் இலைகளும் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. POEM 4 தொகுதியில், 4 நாட்களில் விதைகள் முளைத்தது குறிப்பிடத்தக்கது, மேலும் இவை சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் தொகுதியில் முளைத்துள்ளது.