வடகொரியா, தற்போது 1,100 கிலோ மீட்டர் பயணித்த ஏவுகணையை வடகிழக்கு கடலில் விழுந்ததைப் பதிவு செய்துள்ளது.
வடகொரியா, அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்வது உலக நாடுகளுக்கு தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கின்றது. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை எதிரி நாடுகளாக கருதும் வடகொரியா, ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது. நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாக்குதல் நடத்துவோம் எனவும் எச்சரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா, தற்போது மீண்டும் 1,100 கிலோ மீட்டர் பயணித்த ஏவுகணையை வடகிழக்கு கடலில் விழுந்ததைப் பதிவு செய்துள்ளது. இது 2025ம் ஆண்டு நடத்திய முதல் ஏவுகணை சோதனையாகும்.