அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் முன், ஹமாஸ் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளார்.
2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசா முனையை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 1,139 பேர் உயிரிழந்தனர். மேலும், 251 பேர் பணயக்கைதிகளாகக் கடத்தப்பட்டனர். இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் அறிவித்து, 117 பணயக் கைதிகளை மீட்டது. ஆனால் 101 இஸ்ரேலியர்கள் தற்போது ஹமாஸ் வசம் பணயக்கைதிகளாக உள்ளனர். தற்போது, காசாவில் 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, பணயக் கைதிகள் மீட்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் முன், ஹமாஸ் அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளார்.