ஆஸ்திரியாவில், வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் வரை, தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷலன்பர்க் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணி அரசு அமைக்க முடியாததால், கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் காா்ல் நெஹமா் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு, ஆஸ்திரியாவில் தீவிர வலதுசாரி அரசு அமையவிருப்பது இதுவே முதல்முறை.