தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்டம் நேற்று அமலுக்கு வந்தபோது, பாங்காக்கில் 300-க்கும் மேற்பட்ட ஜோடிகள் ஒரே நாளில் திருமணம் செய்து, புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்வுத் தொடர்பாக, பிரதமர் பேடோங்டார்ன் ஷினாவத்ரா கூறுகையில், "இந்த சட்டம் பாலியல், இனம், மதம் என எதையும் பொருட்படுத்தாமல் அனைவரையும் சமமாக அரவணைக்கிறது. நாம் அனைவருக்கும் சம உரிமை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்கிறோம்" என தெரிவித்தார். புதிய சட்டம் மூலம், தாய்லாந்தில் ஓரின தம்பதிகள் திருமணம் செய்து, சொத்துக்கள் பெறவும், குழந்தைகளை தத்தெடுத்து பிள்ளைகளை வளர்க்கவும் சம உரிமைகள் பெற்றுள்ளனர்.