இந்தியா தயாரிக்கும் ரெயில்களை பல நாடுகள் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டுகின்றன என்றார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
உலக பொருளாதார மாநாட்டில் பேசிய மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் உணவு பதப்படுத்துதல், முதலீட்டு பொருட்கள், தொழிற்சாலை பொருட்கள் மற்றும் பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்ய பிற நாடுகளுக்கு அதிக ஆர்வம் இருக்கின்றது என தெரிவித்தார். இந்தியா தயாரிக்கும் ரெயில்களை பல நாடுகள் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டுகின்றன என்றார். 2019 பிப்ரவரி 15-ல் புதுடெல்லி-வாரணாசி வழியில் 160 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. மேலும், ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் மராத்தி ரூ.16 லட்சம் கோடி, தெலுங்கானா ரூ.60 ஆயிரம் கோடி மற்றும் ஆந்திரா ரூ.2-2.5 லட்சம் கோடி அளவுக்கான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறினார்.