வாடிக்கையாளர்களிடமிருந்து ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் கட்டண வேறுபாடுகள் குறித்து உபேர் மற்றும் ஓலா மீது புகார்.
உபேர் மற்றும் ஓலா போன்ற டாக்சி ஒருங்கிணைப்பாளர் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன. இந்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களின் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டிருப்பதாக புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்த புகார்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி சமூக வலைதளத்தில் இதுகுறித்து தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.