மத்திய அரசு இந்தியாவின் உயரிய பத்ம விருதுகளை நேற்று அறிவித்தது.
மத்திய அரசு இந்தியாவின் உயரிய பத்ம விருதுகளை நேற்று அறிவித்தது. இதில் 7 பேர் பத்ம விபூஷண், 19 பேர் பத்மபூஷண் மற்றும் 113 பேர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளனர். மொத்தம் 139 பேர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்றவர்களில் இரப்பை குடலியல் நிபுணர் துவ்வூர் நாகேஷ்வர் ரெட்டி, முதல் சீக்கிய தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், கதக் நடனக்கலைஞர் குமுதினி லகியா, வயலின் இசைக்கலைஞர் லட்சுமிநாராயண சுப்ரமணியம், மறைந்த எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், மறைந்த தொழிலதிபர் ஒசாமு சுசுகி மற்றும் பாடகி ஷ்ரத்தா சின்ஹா ஆகியோரும் உள்ளனர்.இதில் வாசுதேவன் நாயர், ஒசாமு சுசுகி மற்றும் ஷ்ரத்தா சின்ஹா ஆகியவர்களுக்கு மறைவுக்கு பிறகு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.














