வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 3) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,063.94 என்ற புள்ளிகளில் தொடங்கியது. இறுதியாக 77186.74 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது 0.4% சரிவாகும். அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 0.5% சரிந்து 23361.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இன்றைய பங்குச் சந்தையில் டிரம்ப் விதித்த வரி முக்கிய இயக்கும் புள்ளியாக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில், டிசிஎஸ், டாட்டா ஸ்டீல், ரிலையன்ஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், அதானி பவர், வோடபோன், சுஸ்லான் எனர்ஜி, எஸ் வங்கி, எல் அண்ட் டி, எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போன்ற பல முக்கிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தன. ஜொமாட்டோ, பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, இன்ஃபோசிஸ் போன்ற குறிப்பிட்ட சில நிறுவனங்கள் ஏற்றம் பெற்றன.