டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

February 10, 2025

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள், 21 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாக கூறி, கோரிக்கைகளை 11-ந்தேதிக்குள் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் வருகிற 11-ந்தேதி டாஸ்மாக் […]

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர்கள், 21 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாக கூறி, கோரிக்கைகளை 11-ந்தேதிக்குள் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் வருகிற 11-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu