அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு காலாவதியான மருந்துகளை தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருந்துகள் இல்லாவிட்டால் புகார் செய்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 104 வழங்கப்பட்டுள்ளது எனவும் புகார் பெட்டிகளும் உள்ளன எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படை அமைத்து சோதனை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.