இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணய கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தது. டெல் அவிவின் பெட் யாம், ஹொலன் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பஸ்களில் வெடிகுண்டுகள் வெடித்து தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படையினர் விரைந்து தீயை அணைத்தனர்.
இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. மேற்கு கரையில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்த தாக்குதலை செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. பதற்றமான சூழலில், இந்தச் சம்பவம் பாதுகாப்பு சிக்கல்களை மேலும் அதிகரிக்கக்கூடும் என கருதப்படுகிறது.