அமெரிக்காவில் சட்ட விரோதமாக தம்பி இருந்த 12 பேர் நான்காம் கட்டமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதில் ஒன்றாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், பிப்ரவரி முதல் வாரம் முதல், இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தி வருகிறார்கள். இதுவரை, 3 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.நான்காவது கட்டமாக, 12 இந்தியர்களுடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று டெல்லி வந்தடைந்தது. இதில் 4 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர் ஆகியோர் உள்ளனர்.














