தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் பின்புறத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டத்திற்கு குடிநீர் கால்வாய் அமைக்கப்படுகின்றது. இதற்கான சுரங்கப்பாதை பணிகளுக்காக இருபுறமும் இருந்து துளையிடும் எந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வந்தன.கடந்த வாரம் ஏற்பட்ட மண் சரிவில் 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கினார்கள். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில், 5 பேரின் உடல்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சுரங்கத்தில் சிக்கிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தது உறுதியாக அறியப்பட்டது.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் பொறியாளர்கள், 6 பேர் தொழிலாளர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனையின் பிறகு உடல்களை குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.














