கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி, தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்த பகுதியில் 1.25 லட்சம் விசைத்தறிகள், 10,000 விசைத்தறி கூடங்கள் உள்ளன. கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்கள், கூலி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 7 முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்த தீர்வும் எட்டப்படாததால், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது.
இதனால் கோவை, திருப்பூர் பகுதிகளில் 1.5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தினசரி ₹35 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. தொழிலாளர்களின் பிரச்சினைக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என சங்கத் தலைவர் பூபதி வலியுறுத்தினார்.