பராமரிப்பு பணிக்காக அறிவிப்பு சென்னை–கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 18 மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இன்று முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனுடன், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு செல்லும் இரண்டு ரெயில்கள் தற்போது சென்னை பீச் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.