பாரிசில் மின்சார ட்ரோன் டாக்ஸியின் முதல் சோதனை பயணம் நடத்தப்பட்டது

November 11, 2022

‘ஓலோ காப்டர்’ என்ற மின்சார ஹெலிகாப்டர் டாக்ஸி, முதல் முறையாக, பாரிஸில் சோதனை முறையில் இயக்கப்பட்டது. பெரிய அளவிலான ட்ரோன் அமைப்பில் இருக்கும் இந்த டாக்ஸியின் சோதனை ஓட்டத்தில் ஒரு பயணி பயணித்தார். போன்டாய்ஸ் - கார்மீல்ஸ் வான் வழித்தடத்தில் இந்த ட்ரோன் டாக்ஸி இயக்கப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த ஓலோ காப்டர் நிறுவனத்தின் தலைவர் டெரிக் ஹூக், அடுத்த 18 மாதங்களுக்குள், இந்த ட்ரோன், வணிக ரீதியான பயணங்களை மேற்கொள்ள தொடங்கும் என்று தெரிவித்தார். வரும் 2024ல், […]

‘ஓலோ காப்டர்’ என்ற மின்சார ஹெலிகாப்டர் டாக்ஸி, முதல் முறையாக, பாரிஸில் சோதனை முறையில் இயக்கப்பட்டது. பெரிய அளவிலான ட்ரோன் அமைப்பில் இருக்கும் இந்த டாக்ஸியின் சோதனை ஓட்டத்தில் ஒரு பயணி பயணித்தார். போன்டாய்ஸ் - கார்மீல்ஸ் வான் வழித்தடத்தில் இந்த ட்ரோன் டாக்ஸி இயக்கப்பட்டது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஓலோ காப்டர் நிறுவனத்தின் தலைவர் டெரிக் ஹூக், அடுத்த 18 மாதங்களுக்குள், இந்த ட்ரோன், வணிக ரீதியான பயணங்களை மேற்கொள்ள தொடங்கும் என்று தெரிவித்தார். வரும் 2024ல், சம்மர் ஒலிம்பிக் போட்டி பாரிசில் நடைபெற உள்ளது. அப்போது, இந்த ட்ரோன் டாக்ஸி இயக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ஹெலிகாப்டர் பயணங்களைப் போல, இதில் உடல் உபாதைகள் எதுவும் நேராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான உயரத்தில் நகரங்களுக்கு இடையிலான பயணம் இந்த ட்ரோன் டாக்ஸி மூலம் எளிதாக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த துறையில், தொடர்ந்து பல போட்டி நிறுவனங்களும் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu