ஸ்கை ரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை தயாரித்துள்ளது. அதனை பிராரம்ப் என்ற திட்டத்தின் மூலம் விண்ணில் செலுத்த உள்ளது. இந்த திட்டம் நவம்பர் 18ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம், விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களும் சாதிக்க முடியும் எனவும், இஸ்ரோவின் சுமைகளை பங்கிட்டு கொள்ள முடியும் எனவும் நிரூபணம் செய்யப்படுகிறது.
விக்ரம் எஸ் ராக்கெட், கலாம் 80 ப்ரோபல்ஷன் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. மூன்று பே லோடுகள் உடன் பிராரம்ப் திட்டம் நிகழும். பூமியின் குறைவான சுற்றுவட்ட பாதையில் விக்ரம் 1 நிறுத்தப்படும்.