உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது: மத்திய மந்திரி பியூஷ் கோயெல்

November 15, 2022

இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக வளர்ந்து வருகிறது என மத்திய மந்திரி பியூஷ் கோயெல் கூறியுள்ளார். புதுடெல்லியில் 41-வது இந்திய சர்வதேச வர்த்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயெல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதன் பின்பு பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயெல், இந்தியாவில் சுதேசி திருவிழா நடத்தப்படும். அதில், உலகத்தின் முன்னால் தரமுள்ள […]

இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக வளர்ந்து வருகிறது என மத்திய மந்திரி பியூஷ் கோயெல் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் 41-வது இந்திய சர்வதேச வர்த்தக திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரி பியூஷ் கோயெல் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளார். இதன் பின்பு பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயெல், இந்தியாவில் சுதேசி திருவிழா நடத்தப்படும். அதில், உலகத்தின் முன்னால் தரமுள்ள பொருட்களை நாங்கள் அறிமுகம் செய்வோம்.

பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் பல வளர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளார். அதனால், உலக பொருளாதாரத்தில் பிரகாசம் நிறைந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. இந்தியாவின் உதவியால் உலக பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். வருங்காலத்தில், உலகையே இந்தியா வழிநடத்தி செல்லும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu