மெட்டா இந்தியா புதிய தலைவர் சந்தியா தேவநாதன்

November 18, 2022

மெட்டாவின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்திய தலைவராக அஜித் மோகன் இருந்தார். 2 வாரங்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, மெட்டாவின் இயக்குனரும், பேஸ்புக் இந்தியாவின் கூட்டு நிறுவனத்தின் தலைவருமான மணீஷ் சோப்ரா, தற்காலிகமாக தலைவர் பதவியை வகித்து வருகிறார். சந்தியா தனது புதிய பதவியை அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி […]

மெட்டாவின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்திய தலைவராக அஜித் மோகன் இருந்தார். 2 வாரங்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, மெட்டாவின் இயக்குனரும், பேஸ்புக் இந்தியாவின் கூட்டு நிறுவனத்தின் தலைவருமான மணீஷ் சோப்ரா, தற்காலிகமாக தலைவர் பதவியை வகித்து வருகிறார்.

சந்தியா தனது புதிய பதவியை அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி ஏற்கிறார். இவர் சிட்டி வங்கி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிகளில் பணியாற்றினார். பேஸ்புக்கில் கடந்த 2016ல் சேர்ந்தார். சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் தனது நிறுவனத்தை மிகவும் சிறப்பாக வளர்த்ததற்கு பரிசாக, மெட்டா இந்தியாவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu