ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் பாராசூட் அம்சம் பரிசோதனை செய்யப்பட்டது - இஸ்ரோ

November 22, 2022

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணி செய்து வருகிறது. திட்டத்தின் பகுதியாக, விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமியில் தரையிறக்க தேவையான பாராசூட் அம்சம் பரிசோதனை செய்யப்பட்டது. விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர், உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள BFFR பகுதியில் இந்த பரிசோதனையை செய்தது. பரிசோதனையில் 5 டன் எடையுள்ள பொருள், 2.5 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இந்திய விமானப்படையின் IL 76 விமானம் மூலம் வெளியேற்றப்பட்டது. பாராசூட்கள் மூலம் அவை பூமியில் தரையிறக்கப்பட்டது. […]

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணி செய்து வருகிறது. திட்டத்தின் பகுதியாக, விண்வெளி வீரர்களை பத்திரமாக பூமியில் தரையிறக்க தேவையான பாராசூட் அம்சம் பரிசோதனை செய்யப்பட்டது. விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர், உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள BFFR பகுதியில் இந்த பரிசோதனையை செய்தது.

பரிசோதனையில் 5 டன் எடையுள்ள பொருள், 2.5 கிலோமீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இந்திய விமானப்படையின் IL 76 விமானம் மூலம் வெளியேற்றப்பட்டது. பாராசூட்கள் மூலம் அவை பூமியில் தரையிறக்கப்பட்டது. சனிக்கிழமை நடந்த பரிசோதனையில், பாராசூட்கள் சரியாக செயல்பட முடியாமல் போகும் நிலை பரிசோதிக்கப்பட்டது. ககன்யான் திட்டத்தில் இந்த பரிசோதனை முக்கிய மைல்கல் ஆகும். நேரடியாக, விண்வெளி வீரர்களை ஏற்றுச் செல்லும் முன்னர், இரண்டு முறை ஆளில்லா பரிசோதனைகளை ககன்யான் திட்டத்தில் நடத்த இஸ்ரோ முடிவெடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu