நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 200 மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,2018-19 ல் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ரூ 2,326 கோடியாக இருந்த நிலையில், 2021-22ல் ரூ 7,106 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 200 மடங்கு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க மத்திய அரசு அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.