நேற்று நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு தேர்தலின் பின் மத்திய பிரதேசத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19,26 மற்றும் 7ஆம் தேதி என மூன்று கட்டமாக தேர்தல் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெற்றது. அதன்படி 10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட்ட 93 தொகுதிகளில் காலை ஏழு மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது
இதில் மொத்தம் 64.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு சென்ற பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்